கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹதுடுவ - ஜம்புகஸ்முல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (19) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
கஹதுடுவயிலிருந்து ஜம்புகஸ்முல்ல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று அதே திசையில் பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டியை முன்நோக்கிச் செல்ல முயன்ற போது வீதியில் பயணித்த வயோதிபப் பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த வயோதிபப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் ஹோமாகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM