சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றியமைக்க அதன் பிரதானி இணக்கம் தெரிவித்திருந்தார் - எதிர்க்கட்சித் தலைவர்

Published By: Digital Desk 7

20 Jun, 2024 | 08:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார்.ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி பீட்டர் ப்ரூவருடன்  ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடிய போது சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு கூட அவர் இணக்கம் தெரிவித்தார்  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக  அவர் மேலும் கூறுகையில்,

வாடகை வருமான வரி குறித்து சமூகத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நாட்டில் வரிக் கொள்கையின் அடிப்படையில் நிதி தரவுகள் மற்றும் தகவல்களை சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ள போதிலும், இந்த சொத்து வரி அல்லது வேறு வரிகளை அதிகரிக்கும் போது தயாரிக்க வேண்டிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கை இன்னும் சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி பீட்டர் ப்ரூவரின் கருத்துப்படி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய முடியும். ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடிய போது சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு கூட பீட்டர் ப்ரூவர் இணக்கம் தெரிவித்தார்  

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய முடியும் என்று கூறும்போது, அதை திருத்த முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார்.  சர்வதேச நாணய நிதியத்தின் உடனான ஒப்பந்தம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடாது. தாம் விரும்பும் வகையில் மக்கள் மீது வரிகளை சுமத்த முடியாது என்பதனால், வரி அறவிடுவதற்கான காரணங்களையும், தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கைகளையும் முன்வைக்குமாறு  கோருகிறேன்.

வரி நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குவதுடன், வரி வலைக்கு வெளியே இருப்பவர்களையும் வரி வலையில் உள்ளடக்குமாறும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக இருக்காது, நாட்டுக்கு ஏற்ற உடன்படிக்கையை எட்டுமாறும்  கேட்டுக்கொள்கிறேன் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34