ஆர். சேதுராமன்
இவ்வருடம் ஹஜ் யாத்திரையின்போது குறைந்தபட்சம் 550 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர் என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் எகிப்தியர்களே அதிகமாகும். குறைந்தபட்சம் 323 எகிப்திய யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளனர் என அரேபிய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி எகிப்தியர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தனர், ஒருவர் சனநெரிசலில் சிக்கி காயமடைந்ததால் உயிரிழந்தார் என இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார் என ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
புனித மக்கா நகருக்கு அருகிலுள்ள அல் முவைசெம் நகரின் வைத்தியசாலை பிரேத அறையிலிருந்து இப்புள்ளிவிபரங்கள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த ஜோர்தானிய ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது. 41 ஜோர்தானியர்கள் இறந்துள்ளனர் என செவ்வாய்க்கிழமை ஜோர்தானிய அரசாங்கம் தெரிவித்திருந்தது.
பல்வேறு நாடுகளிலிருந்து கிடைத்த தரவுகளின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 577ஆக அதிகரித்துள்ளது என ஏ.எவ்.பி தெரிவித்துள்ளது.
அதேவேளை அல்- முவைய்செம் வைத்தியசாலை பிரேத அறைக்கு புள்ளிவிபரங்களின்படி 550 பேர் உயிரிழந்துள்ளனர் என இராஜந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான், இந்தோனேஷியா, செனகல் நாட்டவர்களும் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
51.8 பாகை செல்சியஸ் வெப்பம்
இவ்வருடம் 18 இலட்சம் பேர் ஹஜ் யாத்திரையில் ஈடுபட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 16 இலட்சம் பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
காலநிலை மாற்றத்தினால் யாத்திரிகர்களின் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. சவூதி அரேபியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, ஹஜ் யாத்திரை சடங்குகள் மேற்கொள்ளப்படும் பிரதேசத்தில் ஒவ்வொரு தசாப்தமும் வெப்பநிலையானது 0.4 பாகை செல்சியஸினால் (0.72 பாகை பரனைட்) அதிகரிக்கின்றனது.
கடந்த திங்கட்கிழமை (17) மக்கா பெரிய பள்ளிவாசலில் வெப்பநிலை 51.8 பாகை செல்சியஸாக (128 பாகை பரனைட்) பதிவாகியிருந்தது என சவூதி அரேபியாவின் தேசிய வளிமண்டலவியல் மத்திய நிலையம் தெரிவித்தது.
இதேவேளை, ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள், பணத்தை சேமிப்பதற்காக உத்தியோகபூர்வ ஹஜ் விசா இல்லாமல் ஹஜ் கடமைகளை மேற்கொள்ள முயல்கின்றனர். இது மிக ஆபத்தானதாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில், பதிவுசெய்யப்படாத யாத்திரிகர்களால், சவூதி அரேபிய அதிகாரிகளால் வழங்கப்படும் குளிரூட்டப்பட்ட தங்குமிடங்களை அடைய முடியாமல் போகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எகிப்தியர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு, பதிவு செய்யப்படாத எகிப்திய யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தமையும் காரணம் என மேற்படி இராஜதந்திரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹஜ் யாத்திரைக் காலத்துக்கு முன்னதாக புனித மக்கா நகரிலிருந்து இலட்சக்கணக்கான பதிவுசெய்யப்படாத யாத்திரிகர்களை தாம் அகற்றியதாக சவூதி அரேபிய அதிகாரிகள் இம்மாத முற்பகுதியில் தெரிவித்திருந்தனர்.
200 நாடுகளிலிருந்து...
ஜூன் 14 முதல் ஜூன் 19ஆம் திகதி வரையான இவ்வருட ஹஜ் யாத்திரை காலத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வோரின் எண்ணிக்கை 1.8 மில்லியன் ஆகும் என சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்மா அமைச்சர் தௌபீக் அல் ரபைய்ஹா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இவர்களில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 221,854 பேரும் அடங்குவர்.
200 இற்கும் அதிகமான நாடுகளிலிருந்து யாத்திரிகள் வந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, சவூதி அரேபிய புள்ளிவிபரவியல் துறையினரின் தகவல்களின்படி, மேற்படி யாத்திரிகர்களில் 958,137 பேர் ஆண்கள், 875,027 பேர் பெண்கள்.
அரபு நாடுகளைச் சேர்ந்தவர் யாத்திரிகர்கள் 22.3 சதவீதமாகும். அரபு நாடுகள் அல்லாத ஆசிய நாடுகளின் யாத்திரிகள் 63.3 சதவீதம். அரபு அல்லாத ஆபிரிக்க நாட்டவர்கள் 11.3 சதவீதம். ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா கண்டங்கள் மற்றும் ஏனைய பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் 3.2 சதவீதமாகும்.
மேற்படி வட்டாரங்களின் தகவல் களின்படி, இவ்வவருட ஹஜ் யாத்திரைக்கு சவூதி அரேபியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்களில் 1,546,345 பேர் வான் வழியாகவும், 60,253 பேர் தரை வழியாக வும், 4,714 பேர் கடல் வழியாகவும் வந்துள் ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM