பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியில் லொறி ஒன்றை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (19) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்னேரியாவிலிருந்து வாழை மற்றும் பலாக்காய்களை ஏற்றிக் கொண்டு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் எதிரில் திடீரென யானை ஒன்று வந்துள்ளது.
இதன்போது லொறியின் சாரதி லொறியை விட்டு இறங்கித் தப்பிச் சென்றுள்ள நிலையில் எதிரில் இருந்த யானை லொறியை கவிழ்த்து லொறியினுள் இருந்த நபரைத் தாக்கியதில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் ஹிங்குரங்கொட ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM