உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது தவறான எடுத்துக்காட்டு - அத்துரலியே ரத்ன தேரர்

Published By: Digital Desk 3

18 Jun, 2024 | 03:08 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் மகிழ்ச்சியடையவில்லை.ஆகவே இந்த தீர்ப்பு குறித்து பாராளுமன்றத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட நிலைப்பாடா அல்லது அமைச்சரவையின் நிலைப்பாடா? நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது தவறானதொரு எடுத்துக்காட்டாகும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர்  அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை  முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சட்டத்துறை, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை உள்ளிட்ட மூன்று துறைகளின் அதிகாரங்களும் வேறுப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு துறையின் அதிகாரத்தில் பிறிதொரு துறை தலையிட கூடாது என்பது அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கும் வியாக்கியானத்தை பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள கூடாது என்று பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள வியாக்கியானம் குறித்து மகிழ்ச்சியடைய போவதில்லை.பாராளுமன்றத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது அவருடைய தனிப்பட்ட  நிலைப்பாடா?அல்லது  அமைச்சரவையின் நிலைப்பாடா? உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது தவறானதொரு எடுத்துக்காட்டாகும்.

இலங்கை பௌத்த நாடு அரசியலமைப்பில் ஆண் -பெண் என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளும் காண்பிக்கப்படவில்லை.சட்டத்தின் ஊடாக ஆண்,பெண் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள்.அதேபோல் பௌத்த மத கோட்பாடுகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆண் மற்றும் பெண் பாலினத்துக்கு அப்பாற்பட்டு மூன்றாம் பாலின தரப்பினரது செயற்பாடு உலகளாவிய ரீதியில் எவ்வாறு காணப்படுகிறது என்பதை உலக நடப்பு அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.மேற்குலக கலாசாரத்தை பின்பற்றினால் இலங்கைக்கே உரித்தான சுதேச கலாச்சாரம் இல்லாதொழியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56