விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - தமிழக வெற்றி கழகம் அறிவிப்பு

Published By: Digital Desk 3

18 Jun, 2024 | 02:20 PM
image

''விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை'' என தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதியன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக- பாமக -நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகிறது. இந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளரானன புஸ்ஸி ஆனந்த் விக்கிரவாண்டி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

''தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வெளியிட்ட கட்சி தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

கழகத் தலைவர் அவர்கள் விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்களை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழக முழுவதும் மக்கள் சந்திப்பு பயணங்கள் என்று. வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்

எனவே அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்த தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக வருகிற ஜூலை 10 ஆம் திகதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் , எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் பாமக இடையே நேரடி போட்டி உருவாகி இருக்கிறது என்றும், இந்த தேர்தலில் பாமக வெற்றி பெறவில்லை என்றாலும்.. அதீத வாக்கு சதவீதத்தை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்தை உறுதிப்படுத்திக் கொள்வற்காக தீவிரமாக களப்பணியில் ஈடுபடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கான் அகதிகளிற்கும்...

2025-01-21 16:08:47
news-image

துருக்கியில் ஹோட்டலில் தீ - பத்துபேர்...

2025-01-21 14:06:38
news-image

பணயக்கைதிகளிற்கு நினைவுப்பரிசுகளை வழங்கிய ஹமாஸ்

2025-01-21 11:37:02
news-image

காசாவில் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட...

2025-01-21 11:04:38
news-image

தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:...

2025-01-21 10:05:55
news-image

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுகின்றது அமெரிக்கா-...

2025-01-21 08:30:11
news-image

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் அவசரகாலநிலை-குடியேற்றவாசிகள் நாடு...

2025-01-20 23:09:44
news-image

எனது உயிர் ஒரு நோக்கத்திற்காகவே காப்பாற்றப்பட்டது-...

2025-01-20 23:01:43
news-image

அமெரிக்காவின் பொற்காலம் உதயம் - ஜனாதிபதியாக...

2025-01-20 22:54:22
news-image

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்றார்...

2025-01-20 22:45:39
news-image

பதவியேற்பதற்காக ரொட்டுன்டா வந்தார் டிரம்ப்

2025-01-20 22:26:20
news-image

டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க முன்னாள்...

2025-01-20 22:19:13