காலி, ரத்கம பிரதேசத்தில் திருடப்பட்ட 11 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்றை ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ரத்கம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த முச்சக்கரவண்டியானது ரத்கம , கம்மெத்தகொட பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இனந்தெரியாத சிலரால் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றின் ஊடாக இந்த முச்சக்கரவண்டியை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM