(ஆர்.ராம்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழுமையாக முறிவடைந்துள்ளதாக சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இணைப்பு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் சஜித் பிரேமதாச தரப்பில் பங்கேற்றிருந்த அவர் தன்னை முழுமையாக அடையாளப்படுத்துவதற்கு விரும்பாத நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்து ஒரே அணியாக்குவதற்காக இருதரப்பிலும் உள்ள முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட குழுவினருக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டன.
அதேபோன்று குறித்த பேச்சுவார்த்தையின்போது இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விட்டுக்கொடுப்புக்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக உரையாடப்பட்டது.
எனினும், இருதரப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாரில்லாத நிலையில் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுப்பதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் தொடர்ச்சியாக இணக்கப்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தபோதும் தலைவர்களின் விட்டுக்கொடுப்பற்ற நிலைமை நீடித்தமையால் தொடர்ந்து அந்த விடயத்தினை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவ்விதமான பேச்சுக்களை முன்னெடுப்பதில் சிக்கலான நிலைமைகளே ஏற்பட்டள்ளது.
ஆகவே, அப்பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதால் பயனில்லை. எனவே அந்த முயற்சி தற்போது கைவிடப்பட்டுள்ளது” என்றார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த சஜித் பிரேமதாசவிடத்தில், ஜனாதிபதி ரணிலுடன் மீண்டும் இணைவு பற்றி கேள்வி எழுப்பபட்டது. அப்போது அவர் “ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் பாதுகாவலனாக உள்ளார். அத்துடன் அவர் புதிய லிபரல் வாதத்தினைப் பின்பற்றுகிறார். அது தனவந்தர்களை போசிப்பதாகும். ஆகவே அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் முரண்பட்டுள்ளவருடன் எப்படி ‘டீல்’ போட முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM