ரணில் - சஜித் இணைப்பு முயற்சி முழுமையாக முறிவடைந்தது : சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் தகவல்

Published By: Digital Desk 7

16 Jun, 2024 | 09:56 AM
image

(ஆர்.ராம்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழுமையாக முறிவடைந்துள்ளதாக சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இணைப்பு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் சஜித் பிரேமதாச தரப்பில் பங்கேற்றிருந்த அவர் தன்னை முழுமையாக அடையாளப்படுத்துவதற்கு விரும்பாத நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்து ஒரே அணியாக்குவதற்காக இருதரப்பிலும் உள்ள முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட குழுவினருக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டன.

அதேபோன்று குறித்த பேச்சுவார்த்தையின்போது இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விட்டுக்கொடுப்புக்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக உரையாடப்பட்டது.

எனினும், இருதரப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாரில்லாத நிலையில் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுப்பதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் தொடர்ச்சியாக இணக்கப்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தபோதும் தலைவர்களின் விட்டுக்கொடுப்பற்ற நிலைமை நீடித்தமையால் தொடர்ந்து அந்த விடயத்தினை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவ்விதமான பேச்சுக்களை முன்னெடுப்பதில் சிக்கலான நிலைமைகளே ஏற்பட்டள்ளது.

ஆகவே, அப்பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதால் பயனில்லை. எனவே அந்த முயற்சி தற்போது கைவிடப்பட்டுள்ளது” என்றார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த சஜித் பிரேமதாசவிடத்தில், ஜனாதிபதி ரணிலுடன் மீண்டும் இணைவு பற்றி கேள்வி எழுப்பபட்டது. அப்போது அவர் “ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் பாதுகாவலனாக உள்ளார். அத்துடன் அவர் புதிய லிபரல் வாதத்தினைப் பின்பற்றுகிறார். அது தனவந்தர்களை போசிப்பதாகும். ஆகவே அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் முரண்பட்டுள்ளவருடன் எப்படி ‘டீல்’ போட முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25
news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02