(இராஜதுரை ஹஷான்)
சேவைத்துறையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரச சேவை ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (18) சாதகமான தீர்வினை வழங்காவிடின் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
பதவி உயர்வு,ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி புகையிரத அதிபர் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக வெள்ளிக்கிழமை (14) அறிவித்திருந்தனர்.
பகல் 2 மணிக்கு முன்னர் சாதகமான பதில் கிடைக்க வேண்டும் என்றும் புகையிரத சாரதிகள் சங்கத்தின் போக்குவரத்து அமைச்சுக்கு காலவகாசம் வழங்கியிருந்தனர்.
புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று சபை நேற்று முன்தினம் மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
நிறைவேற்று சபையில் உறுதியான தீர்வு எட்டப்படாத நிலையில் பதில் புகையிரத பொது முகாமையாளர் உட்பட புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண உட்பட போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பதில் அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தீர்மானத்தை கைவிட்டனர். இந்த சந்திப்பு தொடர்பில் பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டதாவது,
புகையிரத நிலைய அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சரவை பத்திரம் கடந்த மாதம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இவ்விடயம் குறித்து அரச சேவை ஆணைக்குழுவின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக வகுக்கப்பட்ட செயற்திட்டத்தில் ஒருசில தொழில்நுட்ப கோளாறுகள் காணப்படுவதால் இறுதி தீர்மானம் எடுப்பது தாமதமாகியுள்ளது என அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச சேவை ஆணைக்குழு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை உறுதியான தீர்மானத்தை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது என்றார்.
புகையிரத நிலைய அதிபர் சங்கத்தி;ன் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டதாவது,முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அரச சேவைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி செவ்வாய்க்கிழமை உறுதியான மற்றும் சாதகமான தீர்மானத்தை அறிவிப்பதாக பதில் போக்குவரத்து அமைச்சர் உறுதியளித்துள்ளார். சாதகமான தீர்வின்றேல் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM