யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைத்து புனரமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கப்பட்டள்ளது.
தமது ஆலயங்கள் மீள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான நிதியுதவியை பெற்றுத்தருமாறும் ஒருதொகுதி ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தரப்பினருக்கான காசோலைகள் இன்று சனிக்கிழமை (15) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்து கலாசார திணைக்களத்தின் 2024 இற்கான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியே குறித்த ஒரு தொகுதி ஆலயங்களுக்கு நிதியுதவியாக வழங்கி வைக்கப்பட்டன.
இதனடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட சுமார் 25 ஆலயங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM