(என்.வீ.ஏ.)
மிகவும் பெறுமதிவாய்ந்த ஐசிசி மாதத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்னைக்கான விருதை இலங்கை மகளிர கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து இரண்டாவது தடவையாக வென்று வரலாறு படைத்துள்ளார்.
அதிசிறந்த வீராங்கனைக்கான ஐசிசி மே மாத விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அணித் தலைவி கெத்தரின் ப்றைஸ், இங்கிலாந்தின் சொஃபி எக்லெஸ்டோன் ஆகியோரின் பலத்த சவாலுக்கு மத்தியில் சமரி அத்தபத்தவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
இதே விருதை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சமரி அத்தபத்து வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீராங்கனை என்ற பெருமையை சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.
அபு தாபியில் கடந்த மாதம் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 226 ஓட்டங்களைக் குவித்து, 34 வயதான சகலதுறை வீராங்கனை சமரி அத்தபத்து முதிலிடத்தில் இருந்தார். அத்துடன் 7 விக்கெட்களையும் அவர் கைப்பற்றியிருந்தார்.
சுற்றுப் போட்டியின் ஆரம்பத்தில் சுமாரான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சமரி அத்தபத்து, பின்னர் சிறப்பாக விளையாடியதடன் இறுதிப் போட்டியில் சதம் குவித்து இலங்கையை தோல்வி அடையாத சம்பியனாக்கியிருந்தார்.
அதன் மூலம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இலங்கை பெற்றது.
மே மாதத்தில் தான் விளையாடிய நான்கு போட்டிகளில் அத்தபத்து 37.75 என்ற சராசரியுடன் 151 ஓட்டங்களை மொத்தமாக பெற்றதுடன் 6 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
'ஐசிசியின் இந்த மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை மீண்டும் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் நான் வெளிப்படுத்தி வரும் ஆற்றல்களுக்கு கிடைத்துவரும் தொடர்ச்சியான அங்கீகாரம் எனது ஆற்றலை மேலும் மேம்படுத்தவும், நல்ல செயல்திறனைத் தொடரவும் எனக்கு உந்துசக்தியாக அமைகிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்' என சமரி அத்தபத்து கூறியுள்ளார்.
'கேத்தரின் (பிரைஸ்), சொஃபி (எக்லெஸ்டோன்) ஆகிய இருவருமே மிகத் திறமையான வீராங்கனைகள் என்பதை நிரூபித்துவந்துள்ளனர் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் அவர்களை வாழ்த்துகிறேன். மேலும் எனது இந்த முயற்சியில் எனக்கு ஆதரவளித்துவரும் எனது அணியினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்' என அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM