நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் - ரயில் நிலைய அதிபர் சங்கம்

Published By: Digital Desk 3

13 Jun, 2024 | 05:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பேச்சுவார்த்தைகள் ஏதும் இல்லாமல் பொது பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை அவதானித்துள்ளோம்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 02 மணிக்குள் சாதகமான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன போக்குவரத்து அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஒரே சேவைக்கட்டமைப்பில் உள்ளடங்கும் ரயில்  நிலைய அதிபர், ரயில் ஒழுங்குப்படுத்தல்,ரயில்  சாரதிகள், கணிகாணிப்பு முகாமைத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ரயில் நிலைய அதிபர் பிரிவு வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது.

ஏனைய பிரிவுகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு ஐந்து வருடங்களுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்குவதில் ரயில்  நிலைய அதிபர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இந்த அநீதிக்கு தீர்வு காணும் வகையில் ரயில்  நிலைய அதிபர்களுக்கு ஐந்து ஒருடத்துக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கும் வழிமுறைகளுடன் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு 2024.01.01 ஆம் திகதி எழுத்து மூலமாக சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தினோம்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் ரயில்  திணைக்கள பொதுமுகாமையாளர் உட்பட திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.பேச்சுவார்த்தையின் போது வழங்க்கப்பட்ட வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைத்து சேவையில் ஈடுபட்டோம்.இருப்பினும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

பேச்சுவார்த்தையின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து ரயில்  திணைக்களத்தை நெருக்கடிக்குள்ளாக்கி,பொது பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில்  தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு கிடைப்பதையும் நாங்கள் அவதானித்துள்ளோம்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.எமது கோரிக்கைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை பகல் 02 மணிக்கு முன்னர் சாதகமான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

மஹரகமையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-13 20:53:41
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25