நுவரெலியா பிரதான தபாலகத்தின் செயல்பாடுகள் ஸ்தம்பிதம்

Published By: Digital Desk 3

13 Jun, 2024 | 02:25 PM
image

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்கத்தினர் சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று (13) வியாழக்கிழமை  நள்ளிரவு வரை நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள்  தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இப்பணிப் புறக்கணிப்பு காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையத்தின் ஊடாக விநியோகிக்க கூடிய தபால்கள் பொதியிடப்பட்ட நிலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளன.

தபால் நிலையங்களைப் பாதுகாக்கவும், தபால் ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி முத்திரை வழங்கும் பிரிவு மற்றும் பதிவு தபால் பாரமேற்கும் பிரிவுகள் மாத்திரம் இயங்குகின்றன.

இதற்கென மூன்று அதிகாரிகள் மாத்திரம் கடமையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தில் சிறுவன் நீரில்...

2025-04-25 01:52:13
news-image

ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் தொடர்பில்...

2025-04-24 21:56:07
news-image

தேசபந்துவை பதவி நீக்கும் மூவரடங்கிய விசாரணைக்...

2025-04-24 21:55:36
news-image

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன்...

2025-04-24 21:25:17
news-image

பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பது எமது நாட்டில்...

2025-04-24 17:04:13
news-image

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின்...

2025-04-24 17:52:31
news-image

வொஷிங்டனில் உயர்மட்ட அதிகாரிகள் எவரையும் இலங்கை...

2025-04-24 15:49:58
news-image

அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை...

2025-04-24 20:29:37
news-image

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்...

2025-04-24 14:54:42
news-image

இப்ராஹிமின் சொத்துக்களை அரசுடமையாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு...

2025-04-24 19:03:22
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர்...

2025-04-24 17:59:48
news-image

ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்துக்கு வருகை -...

2025-04-24 18:34:51