யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல்போன இருவரும் தமிழகத்தில் உயிருடன் கரையொதுங்கியுள்ளனர்.
அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியில் கரையொதுங்கியுள்ளனர்.
வேதாரண்யம் காவல் சரகம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திற்கு கிழக்கே சுமார் 2 நாட்டிகல் மைல் தொலைவில், வங்காள விரிகுடா கடலில், இரு மீனவர்களும் கரையொதுங்கியுள்ளனர்.
மீனவர்கள் இருவரையும், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் ரமேஷ் (பொறுப்பு - வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம்) விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
அனலைதீவில் இருந்து கடந்த திங்கட்கிழமை (10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM