(நெவில் அன்தனி)
புளோரிடா, லௌடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது.
இப் போட்டி முடிவை அடுத்து இலங்கையின் சுப்பர் 8 சுற்று கனவு பெரும்பாலும் கலைந்துவிட்டது கலைந்து போயுள்ளது.
இதனை அடுத்து இலங்கைக்கும் நேபாளத்துக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.
இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் தென் ஆபிரிக்கா முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையும் நேபாளமும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருந்தன. ஆனால், முழு நாளும் கடும் மழை பெய்ததால் சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பங்களாதேஷுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் ஏதேனும் ஒரு அணி வெற்றிபெற்றால் அல்லது நேபாளம் அதன் எஞ்சிய 2 போட்டிகளில் எதிர்பாராத விதமாத வெற்றிபெற்றால் இலங்கை முதல் சுற்றுடன் நாடு திரும்ப வேண்டிவரும்.
இப் போட்டியைக் கண்டுகளிக்க நேபாள இரசிகர்கள் பெருமளவில் அரங்குக்கு சென்றிருந்தபோதிலும் இறுதியில் மழையினால் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM