கார் - முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு

11 Jun, 2024 | 07:05 PM
image

மாத்தளை, நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் அரங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (10) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 64 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த 76 வயதுடைய பெண்ணொருவரும்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காரின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு...

2025-01-21 18:41:46
news-image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வயல் பிரதேசத்தில்...

2025-01-21 18:16:48
news-image

இலங்கை - இத்தாலிக்கிடையில் இருதரப்பு விமான...

2025-01-21 17:33:12
news-image

2024 ஆம் ஆண்டில் 386 யானைகள்...

2025-01-21 17:12:31
news-image

மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான ஆலோசனை...

2025-01-21 17:31:50
news-image

அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம்...

2025-01-21 16:49:55
news-image

அம்பியூலன்ஸ் வண்டி - டிப்பர் வாகனம்...

2025-01-21 16:31:59
news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45