அரசமைப்பில் காணப்படும் கவனிக்காமல் விடப்பட்ட சிறிய தவறு ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தையும் நாடாளுமன்றத்தின் ஆயுள்காலத்தையும் மேலும் ஒருவருடத்திற்கு நீடிக்ககூடிய வாய்;ப்பை வழங்கியுள்ளதாக எகனமி நெக்ஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது
எகனமி நெக்ஸ்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது
2015 இல் 19வது திருத்தம் நடைமுறைக்கு வந்த காலம் முதல் கவனம் செலுத்தப்படாமலிருந்த அரசியல் அமைப்பின் ஒரு தவறினை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தினை நீடிக்க கூடும்.
19வது திருத்தம்ஜனநாயக சீர்திருத்தங்களை உறுதி செய்யவும்இநல்லாட்சியை உறுதிசெய்யவும் நாடாளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை ஐந்தாக குறைக்கவும் முயன்றது.
எனினும் பதவிக்காலம் தொடர்பான நிலைத்தன்மை உறுதிசெய்வதை அது புறக்கணித்தது.
19வது திருத்தத்திற்கு அமைய நாடாளுமன்றத்தினதும்ஜனாதிபதியினதும் ஆறு வருட பதவிக்காலம் பற்றிய அனைத்து குறிப்புகளும் ஐந்தாண்டுகளாக மாற்றப்பட்டாலும் உறுப்புரை 83(டி) கவனிக்கப்படாமலும் மாற்றப்படாமலும் ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கானவாய்ப்பினை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான எந்தவொரு சட்டமூலத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் ஒப்புதல் தேவை அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பில் ஒப்புதல் பெற வேண்டும்.
எவ்வாறாயினும் பிரிவு 83(டி) இன் கீழ் சர்வஜனவாக்கெடுப்பு ஐந்து (5) ஆண்டுகளுக்கு அல்லாமல் ஆறு (6) ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டால் மட்டுமே தேவைப்படும்
இதன் பொருள் விக்கிரமசிங்க அரசியலமைப்பை மீறாமல் தனது சொந்த மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 11 மாதங்கள் மற்றும் 29 நாட்களுக்கு நீட்டிக்க முடியும்.
விக்கிரமசிங்கவுக்கு இன்னும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நாடு தயாராக இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்த கருத்துக்களுடன் இதையும் சேர்த்து வாசிக்க வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM