இன்று விஹாரை ஒன்றை அமைக்க முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது : மஹிந்த ராஜ­பக்ஷ 

Published By: Priyatharshan

01 Apr, 2017 | 10:59 AM
image

சோழ மன்­னர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த கால­கட்­டத்தில் பௌத்த தர்­மத்தை அழிக்க முனைந்­தனர். ஆனால் எமது சந்­த­தி­யினர் தர்­மத்தை பாது­காத்­தனர் என தெரி­வித்­துள்ள முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ இன்று விஹா­ரையோ புத்தர் சிலையோ அமைக்க முடி­யாத நிலை தோன்­றி­யுள்­ளது  என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

 காரணம்  அதற்கு சீமெந்து எங்­கி­ருந்து கிடைத்­தது என விசா­ரிக்கும் ஆட்­சி­யா­ளர்கள் நாட்டில் உள்­ளனர். இவர்­களும் தர்­மத்­திற்கு எதி­ரா­கவே செயற்­ப­டு­கி­றார்கள் என்றும் மஹிந்த ராஜபக் ஷ  கூறி­யுள்ளார். 

பெலி­யத்­தையில் அண்­மையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே   மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் 

இலங்கை இன்று போதை பொருட்­களை விநி­யோ­கிக்கும் மத்­திய நிலை­ய­மாக மாறி­யுள்­ளது. போதைப் பொருட்கள் கப்­பல்­க­ளி­லேயே வரு­கின்­றன.

இன்று இலங்­கையில் ஒரு புத்தர் சிலையை அமைக்க முடி­ய­வில்லை. விஹா­ரையை அமைக்க முடி­ய­வில்லை. அப்­படி அமைத்தால் அதற்கு சீமெந்து எங்­கி­ருந்து கிடைத்­தது என ரக­சிய பொலிஸார் விசா­ரிக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்­கமே இதனை மேற்­கொள்­கின்­றது. 

அர­சி­யல்­வா­தி­களை அடக்கு முறைக்கு உள்­ளாக்க முடியும். ஆனால் மதத்­தையும் தர்­மத்­தையும் விஹா­ரை­யையும் அடக்கு முறைக்கு உள்­ளாக்க முடி­யாது. அவ்­வாறு அடக்கு முறைக்கு உள்­ளாக்க முனைந்தால் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம்.

அண்­மையில் அரச மர­மொன்றை வெட்­டி ­சாய்க்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் அதனை வழி­ப­்டு­ப­வோரின் எதிர்ப்பால் அம்­மு­யற்சி கைவி­டப்­பட்­டது.

சோழ மன்­னர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த காலத்தில் பௌத்த தர்­மத்தை அழிக்க முனைந்­தனர். ஆனால் எம்­ம­வர்கள் தர்­மத்தை பாது­காத்­துள்­ளனர்.எமது பிள்­ளைகள் நல்ல வழியில் வாழ வேண்டும். அதற்கு எமது தர்மம் பாது­காக்­கப்­பட வேண்டும்.

பழி­வாங்கல்  இன்­றைய ஆட்­சி­யா­ளர்­களின் கொள்­கை­யா­கி­யுள்­ளது.நாட்டில் போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளன. குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. 

அண்மையில் சிறைக் கைதிகள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு நாட்டின் பாதுகாப்பும் சீரழிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09