பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து ; ஐந்து பேர் காயம்

10 Jun, 2024 | 12:08 PM
image

கண்டி - திகன வீதியில் கெங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (10) திங்கட்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கெங்கல்ல பிரதேசத்தில் வீதியிலுள்ள பாரிய மரமொன்று முறிந்து வீழ்வதை கண்ட  பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாரதி விபத்தை தவிர்ப்பதற்கு முயன்ற போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலிருந்த சுவரிலும் தொலைதொடர்பு கோபுரத்திலும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனிற்குள் இரண்டு ஆசியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் பயணித்துள்ளனர்.

விபத்தின் போது வேன் சாரதி உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் வீதியிலிருந்த தொலைதொடர்பு கோபுரம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49
news-image

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில்...

2026-04-11 14:28:17
news-image

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட...

2026-04-11 13:52:20
news-image

பெரிய புல்லுமலையில் புதையல் தோண்டிய விசேட...

2026-04-11 14:08:23
news-image

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும்...

2026-04-11 13:55:09
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: நாடளாவிய ரீதியில்...

2026-04-11 13:22:13
news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57