பல்­லவர் கால கலை­யம்சங்­க­ளுடன் கும்­பா­பி­ஷேகம் காணும் அராலி வடக்கு நாகேந்­தி­ர­மடம் புளி­யடி ஞான­வை­ரவர் ஆலயம்

Published By: Digital Desk 7

09 Jun, 2024 | 08:13 PM
image

அராலி வடக்கு நாகேந்­தி­ர­மடம் திரு­வ­ருள்­மிகு புளி­யடி ஞான­வை­ரவர்  தேவஸ்­தா­னத்தின் கும்­பா­பி­ஷேகப் பெரு­வி­ழாவின் கர்­மா­ரம்பம் தமிழ்­நாடு திருச்­செந்தூர் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோவில் சிவாச்­சா­ரி­யார்கள் தலை­மையில் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை சூரி­யோ­த­யத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மா­கி­றது.

எதிர்­வரும் 11 ஆம் திகதி செவ்­வாய்க்­கிழமை எண்­ணெய்­க்காப்பு நடை­பெ­ற­வுள்­ள­தோடு 12ஆம் திகதி புதன்­கி­ழமை மகுஆ கும்பா­பி­­ஷேகம் நடை­பெ­ற­வுள்­ளது.

தமி­ழர்­களின் கட்­டடக் கலைப்­பா­ணியின் தோற்­று­வா­ய்க்கு வித்திட்டவர்கள் பல்­லவ மன்­னர்கள். 

அவர்­களில் கி.பி. 6-9ஆம் நூற்­றாண்டு வரை தமி­ழ­கத்தை அர­சாண்ட பல்­லவ மன்­னர்­களில் முதலாம் மகேந்­தி­ர­வர்மன், முதலாம் நர­சிம்­ம­வர்மன் ,முதலாம் இரா­ஜ­சிம்மன் ஆகியோர் முக்­கி­ய­மா­ன­வர்கள். அவர்­களால் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆல­யங்­களை வர­லாற்று ஆய்­வா­ளர்கள் குடை­வரைக் கோவில்கள், கற்­ற­ளிகள் அல்­லது இரதக் கோவில்கள், கட்­டு­மானக் கோவில்கள் எனப்­ப­குத்­துள்­ளனர்.

பல்­ல­ரவர் கால அர­சி­ய­லி­லும் ­சரி கட்­ட­டக்­கலை மர­பி­லும் ­சரி சிங்கம் முக்­கியம் பெற்­றது. அதா­வது முதலாம் நர­சிம்­ம­வர்மன் என்ற பல்­லவ மன்னன் வடக்கே இருந்த ‘ஹதாபி’ என்ற இராச்­சி­யத்தை வெற்றி கொண்ட பின்னர் தனது கொடியின் இலச்­சி­னை­யாக இருந்த ரிஷ­பத்தை சிங்­க­மாக மாற்­றி­ய­தாக வர­லா­றுகள் கூறு­கின்­றன.

இதனால் நர­சிம்­ம­வர்­ம­னுக்குப் பின் வந்த பல்­லவ மன்­னர்­களின் கால­கட்­டங்­களில் சிங்­கங்கள் முதன்மை வகிப்­பதைக் காணலாம். இவ்­வாறு பல்­லவர் கால சிங்­க­முக அடை­யா­ளங்­க­ளுடன் முற்று முழுக்க கருங்­கற்­களால் அமைக்­கப்­பட்டு காணப்­ப­டு­கி­றது கும்­பா­பி­ஷேகம் காணும் அராலி வடக்கு நாகேந்­தி­ர­மடம் புளி­யடி ஞான­வை­ரவர் ஆலயம்.

புளி­யடி ஞான­வை­ரவர் தேவஸ்­தா­னத்­தின் வர­லாறு நெடி­யது. வைரவர் என்ற வார்த­­்­தையே பயங்கரவமானவர் என்ற பொரு­ளுடையது. பாவம் செய்பவர்களுக்கு பயத்தைக் கொடுப்பவர் வைரவர். ஸ்ரீ வைரவர் எட்டு வகையான உருவம் கொண்­ட­வர் என்றும் ஒவ்வொரு உருவமும் எட்டு விதமானவை என்ற அடிப்படையில் 64 வைர­வர்களாக தம் முன்னோர்கள் வணங்கி வந்­துள்ளதாக வைரவர் ஸர்வஸ்வம் என்ற சுவடி கூறுகிறது.

சிவபூமியான இலங்கைத் தீவின் வடக்கே இந்த ஞானவைரவர் ஆலயம் போர்த்­துக்­கேயர் ஆட்­சிக்­கா­லத்தில் தோற்றம் பெற்­ற­தாகும். அராலி வடக்கைச் சேர்ந்த சைவப்­பெரியார் வைர­நாதர் கார்த்திகேசு, அராலி வடக்­கி­லுள்ள ‘அற்­பு­த­வாசா’ என்ற தனது வீட்­டிலே ஐம்­பொன்­னா­லான  வைரவர் திரி­சூ­லத்தை வைத்து வழி­பட்டார்.

இவ்­வ­ழி­பாடு வீட்டில் செய்­வ­தை­விட தனி­­யாக ஆலயம் அமைத்துச் செய்­வதே சாலச்­சி­றந்­தது என்­பதை உணர்ந்து அராலி வடக்கு நாகேந்­திர மடத்­த­டியில் உள்ள தனது சொந்தக் காணி­யி­ன் புளி­ய­ம­ரத்­துக்கு கீழாக வழி­பா­டு­களை மேற்­கொண்டார். அதன்­பின்னர் அவ்­வா­லயம் புளி­யடி ஞான­வை­ரவர் எனப்­ பெயர் பெற்­றது.

வைரவநாதர் காத்திகேசுவைத் தொடர்ந்து அவரது புதல்வரான காத்திகேசு நடேசன் ஆலயத்தை முன் நடத்திச் சென்றதோடு அவரைத் தொடர்ந்து நடேசன் இராஜநாதன், நடேசன் திருக்குமாரன் ஆகியோர் வாழையடி வாழையாக பூஜை வழிபாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

புளி­ய­டியில் அமைக்­கப்­பட்ட இந்த ­வை­ரவர் ஆலயம் ஆரம்­பத்­தி­லேயே சுண்­ணாம்புச் சுவர்­களால் அமைக்­கப்­பட்டு வழி­பா­டுகள் செய்­யப்­பட்­டன. கடந்த 2003ஆம் ஆண்டில் ஆலய ஸ்தாபகர் வைர­வ­நா­தர் கார்த்திகேசுவின் வம்ச கொள்ளுப்பேர­னா­கிய திருக்­கு­மாரன் நடேசன் தலை­மையில் புன­ருத்­தாபனம் செய்­யப்­பட்டு 2006இல் மகா ­கும்­பா­பி­ஷேகம் நடத்தப்பட்டது.

எனினும் தற்­­போது ஆலயம் மீண்டும் கும்­பா­பி­ஷேகம் காண்­கின்­றது. ஆல­யத்தின் தர்­ம­கர்த்­தாவும் வம்­ச­ாவளி பேரனுமான வேத­நெறிச்செல்வன் திருக்­கு­மாரன் நடேசன் தலை­மையில் இம்­முறை ஆலயம் முற்றும் முழு­வதும் கருங்­கற்­களால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்­துள்ள இவ்­வா­ல­யத்தில் மூல­மூர்த்­தி­யாக ஐம்­பொன்­னினால் அமையப் பெற்ற முத்­தலைச் சூலமும், எழுந்­தருளி மூர்த்­தி­யாக ஐம்­பொன்­னினால் உரு­வாக்­கப்­பட்ட வைரவர் திரு­விக்­கி­ர­கமும், பரி­வார மூர்த்­தி­யாக விநா­யகப் பெரு­மானும் இருக்­கின்­றனர்.

இவ்­வா­ல­யத்தின் தல­வி­ருட்­ச­மான புளி­ய­மரம் ஆல­யத்தின் ஈசான மூலையில் தற்­பொ­ழுதும் உள்­ளது. இவ்­வா­ல­யத்தின் தீர்த்தக் கிணறு ஆல­யத்தின் வடக்கு வீதியில் கருங்­கற்­களால் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

நகேந்­தி­ர­மடம் வீதி­யூ­டாக வரு­கின்­ற­போது வீதியின் தெற்குத் திசை­யிலே வடக்கு நோக்­கி­ய­தாக கருங்­கற்­களின் தூண்­களை சிங்­கங்கள் தாங்கி நிற்க இரா­ஜ­கோ­புரம் மூலஸ்­தானம், விமானம், அர்த்­த­மண்­டபம், வசந்­த­மண்­டபம் பரி­வார விநா­யகர் ஆலயம் என்­ப­வற்­றோடு கலை­யம்­ச­மாக ஆலயம் காட்சி தரு­கின்­றது.

ஆல­யத்தில் மொத்தம் 28 கருங்­கற்­தூண்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இத்­தூண்­களை கீழி­ருந்து சிங்­கங்கள் தம்­த­லையில் தாங்கி நிற்­கின்­றன. முன்­ன­மைந்­துள்ள இரண்டு சிங்­கங்­களும் நாக்கை கீழே தொங்க விட்­ட­வை­யாக கர்­ஜ­னை­யுடன் இருப்­ப­தைப் ­போன்றும் வசந்த மண்­டப வாச­லிலே அமைந்­துள்ள சிங்­கங்கள் முன்­னங்­கால்­களை தூக்­கிய வண்ணம் எழுந்து நிற்­ப­வை­யா­கவும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

ஆல­யத்தின் முன்னே அமைக்­கப்­பட்­டுள்ள இரா­ஜ­கோ­பு­ரத்தின் இரண்டு கரை­க­ளிலும் இரண்டு நாசித் தலை­களும் நடுவில் கருங்­கற்­களைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட கல­சங்கள் ஐந்தும் காணப்­ப­டு­வ­தோடு முற்­ப­கு­தியில் வைரப்­பெ­ரு­மானின் திரு­விக்­கி­ர­கமும் நான்கு நந்­தி­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த இரா­ஜ­கோ­பு­ரத்தில் காணப்­படும் கருங்­கல்­லி­லான கல­சங்­களும் கோபு­ரத்தை அடுத்து இரு­ம­ருங்கும் இருக்கும் நாசித் தலை­களும் சிறந்த கட்­ட­டக்­கலை மர­பாக உள்­ளது.

அடுத்து இவ்­வா­ல­யத்தில் சிறப்புப் பெறு­­­வது மூலஸ்­தா­ன­மாகும். வடக்கு நோக்­கி­ய­­தான மூலஸ்­தானம் வாசலின் இரு பகு­தி­க­ளிலும் இரண்டு யானைக் கற்­சிற்­பங்­க­ளை­யும் வாயுவின் மேற்­ப­கு­தியில் கஜ­லக்­சுமி அம்பாள் விக்­கி­ர­கத்­தையும் வெளிப்­பக்­கத்­தில் ஐந்து மாடக்­கோ­வில்கள் அமைக்­கப்­பட்டு அவற்றில் முறையே நர்த்­தன கண­பதி, பிரம்ம ஹாத்தா, தெட்­ச­ணா­மூர்த்தி, லிங்­கோற்­பவம், விஷ்­ணு­, துர்க்கை ஆகி­யோரும் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மூலஸ்­தா­னத்தின் மேற்­ப­கு­தியில் எண்­கோணப் பண்­டிகை அமைப்பில் விமானம் அமைக்­கப்­பட்­டுள்­ள­தோடு கருண கூடு­சா­லை­கள், நந்­திகள் மற்றும் பூத­நா­தர்­களின் சிற்­பங்கள் என்­பன கருங்­கல்­லினால் செய்­யப்­பட்­டுள்­ளன.

விமா­னத்தின் நான்கு திசை­க­ளிலும் முறையே வடக்கில் பிரம்­ம­தே­வரும் கிழக்­கில் வைர­வரும் தெற்கில் கல்­லா­ல­ ம­ரத்தில் அமைந்த தெட்­ச­ணா­மூர்த்­தியும் மேற்கே பத்­மா­ச­னத்தில் அமர்ந்த மகா­விஷ்­ணுவும் சிற்­பங்­க­ளாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளனர். விமா­னத்தின் மேல் பித்­த­ளையி­லான கவசம் காணப்­ப­டு­கி­றது.

அதே­போல அழ­கிய சிற்ப வேலைப்­பா­டு­களைக் கொண்ட வசந்த மண்­டபம், விநா­யகர் ஆலயம் என்­பன காணப்­ப­டு­வ­தோடு பலி­பீடம், சுணை­வ­டி­களம் என்­ப­னவும் பிர­தி­ ஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­ல­யத்­திலே தைப்­பொங்கல், மாத­வெள்ளி, சித்­திராப் பௌர்­ணமி, மண­வா­ளக்­கோலம் ஆகிய உற்­ச­வங்கள் விசே­ட­மா­ன­தாக இருப்­ப­தோடு நித்­திய பூசைகள் தினமும் காலை, மாலையில் நடை­பெ­று­கின்­றன.

எழில்­மி­குந்த இந்த ஆல­யத்தின் கட்­டட மற்றும் சிற்ப பணி­களை முன்­நின்று செய்­தவர் தென்­னிந்­தியாவின் மாமல்­ல­புரம் ஸ்தபதி கலா­நிதி தெட்­ச­ணா­மூர்த்­தி­யாவார்.

இவர் கன்­னி­யா­கு­மரி கடற்­பா­றையில் அமைந்­துள்ள விவே­கா­னந்தர் மண்­ட­பத்தை வடி­வ­மைத்து கட்­டிய ஸ்தபதி எஸ்.பி.ஆச்­சா­ரியின் புதல்­வரும், கும­ரி­மு­னையில் திரு­வள்­ளுவர் சிலையை வடி­வ­மைத்து கட்­டிய ஸ்தபதி கண­ப­தியின் மரு­ம­கனும் ஆவார். அத்­துடன் ஸ்தபதி கலா­நிதி தெட்­ச­ணா­மூர்த்தி இந்­தியா பூரா­கவும், சர்­வ­தேச நாடு­க­ளிலும் பல்­வேறு கோவில்­களை சிற்ப வேலைப்­பாடு­க­ளுடன் அமைத்­துள்ளார் என்­பதும் விசே­ட­மாகும்.

“பொன்­னம்­ப­ல­வா­ணேஸ்­வரம், திருக்­கே­தீஸ்­வரம் உள்­ளிட்ட புகழ்­பூத்த ஆலய திருப்­ப­ணி­களை எனது முன்­னோர்கள் மேற்­கொண்­டுள்ள நிலையில் இடை­வெ­ளிக்குப் பின்னர் அரா­லி­யூரில் ஞான வைரவர் ஆல­யத்­தி­ருப்­ப­ணிகள் கரு­கற்­க­ளினால் ஆக­ம­ மு­றை­க­ளுடன் முன்­னெ­டுப்­ப­தற்கு எனக்கு வாய்ப்புக் கிட்­டி­யது” என்று ஸ்­த­பதி கலா­நிதி தெட்­ச­ணா­மூர்த்தி குறிப்­பிட்டார்.

அத்­துடன், “1300 வருட வர­லாற்றைக் கொண்ட பல்லவர் கால கட்டட நுட்பங்களை அடி­யொற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் தத்ரூபமாக அமைக்கப்­பட்­டுள்ள எட்டுப்பட்ட சிங்கத் தூண்கள் விசேட­மானவையாக உள்ளன” என்றும் அவர் சுட்டிக்­காட்டினார்.

இதேநேரம், “பல்லவர்கால நுட்பங்களுடன் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயமானது, ஈழத்தில் மிக முக்கியமானதாக இருப்ப­தோடு,  வரலாற்றை மீளுருவாக்கம் செய்து பரம்பரைகளைக் கடந்தும் பேணிக்­காப்ப­தாகவும் உருவெடுத்­திருக்கின்றமை பெரு­மைக்குரியது” என்றும் ஸ்தபதி கலாநிதி தெட்­சணாமூர்த்தி கூறினார்.

கலையம்சம் பொருந்தி, கண்டோரின் கண்­களைக் கவரும் இவ்வாலயம் ஈழத்தில் தற்போதுள்ள ஆலயங்களுக்கெல்லாம் எடுத்­துக்காட்டாக இருப்பதோடு 21ஆம் நூற்றாண்­டிலும் பல்லவர்கால கலையம்சம் சிறப்புற்றிருப்பதற்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

சைவசித்தாந்தபண்டிதர் அராலியூர்

கணேசமங்களமூர்த்தி

தமிழாசிரியர், யாழ்.இளவாலை மெய்கண்டான் ம.வி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25
news-image

திருமண தடையை அகற்றி, மங்கல்ய யோகம்...

2024-11-15 16:38:08
news-image

இழப்பிலிருந்தே படைப்பு பீறிட்டுக் கிளம்புகிறது! –...

2024-11-06 05:11:38