உலக சுகாதார ஸ்தாபனத்தின் விருதை வென்றது மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் 

08 Jun, 2024 | 05:21 PM
image

லக புகையிலை தடுப்பு தினத்தை கொண்டாடும் தேசிய நிகழ்வு நேற்று (07) கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 2024ஆம் ஆண்டு உலக புகையிலை தடுப்பு தினத்துக்கான விருது சுகாதார அமைச்சர் Dr.ரமேஷ் பத்திரனவினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துக்கு வழங்கப்பட்டது. 

இதில் சுகாதார இராஜாங்க அமைச்சர் Dr. சீதா அரம்பேபொல, உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி அலகா சிங், சுகாதாரச் செயலாளர் டாக்டர் பி.ஜி. மஹிபால, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் (NATA) தலைவர் டொக்டர் அலன் லுடோவிக், சுகாதார அமைச்சின் தொற்றாநோய்கள் (NCD) பிரிவின் பணிப்பாளர் Dr.சமிந்தி சமரகோன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். 

சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) ஒவ்வொரு ஆண்டும் புகையிலை கட்டுப்பாட்டுத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த பங்களிப்பை புகையிலை தடுப்பு தின விருதுகள் மூலம் அங்கீகரிக்கின்றது. 

அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துக்கு (ADIC) விருது வழங்கப்பட்டுள்ளது.

புகையிலை பாவனையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் புகையிலை நிறுவனத்தின் தந்திரோபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய திட்டம் உலக புகைத்தல் தடுப்பு தினமாகும். இத்தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் திகதி உலக புகையிலை தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வருடத்தின் தொனிப்பொருளில் “புகையிலை கைத்தொழிலின் தந்திரோபாயங்களிலிருந்து சிறுவர்களையும் இளைஞர்களையும் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக புகையிலை பாவனையையும் விநியோகத்தையும் கட்டுப்படுத்துவதற்காகவும் முறையான கொள்கைகளை உருவாக்குவதற்கும் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 

இவ்வருடம் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இவ்விருதினை புகையிலை தடுப்புக்காக தங்களை அர்ப்பணித்துள்ள அனைத்து தரப்பினருக்கும் கிடைத்த ஒரு மதிப்புமிக்க அங்கீகாரம் என்பதை வலியுறுத்துவதில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மகிழ்ச்சி அடைகிறது.

சம்பத் த சேரம்,

நிறைவேற்றுப் பணிப்பாளர்,

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57