வீ.எப்.எஸ். நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறோம் - ஹரின் பெர்னாண்டோ

07 Jun, 2024 | 06:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்கும் வீ.எப்.எஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான சவாலை ஏற்றுக்கொண்டு அமைச்சரவையில் அதற்கு எதிராக செயற்பட்டு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்கும் வீ.எப்.எஸ் நிறுவனத்தின் நடவடிக்கை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்கும் வீ.எப்.எஸ் நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு தற்போது மெளனமாக இருப்பதாக எனக்கும் சிலர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். ஆனால், நான் வாய் மூடிக்கொண்டிருக்கவில்லை. அது தொடர்பில் அமைச்சரவையில் நான் குரல் கொடுத்தேன். அந்த நிறுவனத்துக்கு எதிராக தற்போது வழக்கு தொடுத்திருக்கிறேன். எனது கடமையை நான் செய்து வருகிறேன். அது தொடர்பில் அமைச்சரவையில் நான் மேற்கொண்ட நடவடிக்கை அமைச்சரவையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். என்றாலும் அமைச்சரவையில் கூட்டுப்பொறுப்பை பாதுகாப்பது எனது கடமை.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்கும் வீ.எப்.எஸ் நிறுவனத்தின் கட்டணம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுத்திருக்கிறது. அந்த தீர்மானத்தில் மாற்றங்களை மேற்கொள்ள எங்களுக்கு முடிகிறது. குறிப்பாக தனி நபர் விசா கட்டணத்தை ஏற்கனவே இருந்த கட்டணத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதேபோன்று 7 நாடுகளுக்கு விசா இல்லாமல்  நாட்டுக்குள் வருவதற்கு அனுமதி வழங்கி இருக்கிறோம்.  தற்போது 11 பேர் கொண்ட குழுவினால் ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. அதில் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

அதனால் சவால்களை ஏற்றுக்கொள்ள முடியுமான அமைச்சர் என்ற வகையில், இது தொடர்பாக கலந்துரையாடி விசா வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12