மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் : நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கும், துறைசார்மேற்பார்வை குழுவின் அறிக்கைக்குமிடையில் பரஸ்பர வேறுபாடு - தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

Published By: Digital Desk 7

06 Jun, 2024 | 05:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கும்,துறைசார் மேற்பார்வை குழு முன்வைத்துள்ள அறிக்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நீதிமன்றம் குறிப்பிடாத விடயங்களையும் துறைசார் மேற்பார்வைக் குழு குறிப்பிட்டுள்ளது.ஆகவே இச்சட்டமூலம் விரிவாக ஆராய வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.இருப்பினும் விவாதம் செய்வதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில்  கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் துறைசார் நிபுணர்களுடன் விரிவாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்பது பிரதான குற்றச்சாட்டாக காணப்படுகிறது.

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் நிறுவனங்களை சுயாதீனப்படுத்தல், கண்காணித்தல்,சேவை விநியோகம் செய்தல் உள்ளிட்ட விடயங்களுக்கான  ஏற்பாடுகள்  உள்ளடக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்படுகிறது. இந்த  சட்டமூலம் இயற்றப்பட்டதன் பின்னர்  ஸ்தாபிக்கப்படும் 12 நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் ஆகியோரை நியமிப்பதற்கான அதிகாரம் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சருக்கு வரையறையற்ற அதிகாரங்கள் வழங்கும் போது ஏற்படும் விளைவுகளுக்கு கடந்த கால சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகின்றன. மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நாங்கள் குறை கூறவில்லை.

எதிர்காலத்தில் பதவிக்கு வருபவர்கள் முறையாக செயற்படுவார்களா,இந்த அதிகாரம்  தவறாக பயன்படுத்தப்படலாம். மின்சார சபையில் 6000 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில்  நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு புதிய நியமனங்களை வழங்காமல் இருக்கும் ஆளணி வளத்தை கொண்டு சேவையை முன்னெடுப்பதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில்  விரிவாக ஆராய வேண்டும் என குழுவின் தலைவரிடம் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் அது குறித்து அவர் கவனம் செலுத்தவில்லை. அதற்கான காரணத்தை அறியவில்லை.நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன் நேற்று (நேற்றுமுன்தினம்)  துறைசார் மேற்பார்வை குழுவில் நான்கு மணித்தியாலங்கள் மாத்திரமே பேசப்பட்டு தற்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கும்,துறைசார் மேற்பார்வை குழு முன்வைத்துள்ள அறிக்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.நீதிமன்றம் குறிப்பிடாத விடயங்களையும் துறைசார் மேற்பார்வைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆகவே இச்சட்டமூலம் விரிவாக ஆராய வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.இருப்பினும் விவாதம் செய்வதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 மண்சரிவு...

2025-12-09 16:59:03
news-image

அவசரகாலநிலைப் பிரகடனத்தின்கீழ் பரந்துபட்ட அவசரகால விதிகள்...

2025-12-09 20:25:08
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமையுங்கள்...

2025-12-09 20:23:52
news-image

நிவாரணம் வழங்குவதில் அரசியல் அழுத்தம் -...

2025-12-09 17:07:45
news-image

பண்டத்தரிப்பில் தூண்டிலில் மீன் பிடித்த இளைஞர்...

2025-12-09 23:04:12
news-image

பண்டாரவன்னி கிராம மக்களுக்கான அவசர அறிவிப்பு!

2025-12-09 22:54:05
news-image

மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று...

2025-12-09 20:24:19
news-image

அழிவினால் ஏற்பட்ட இழப்புக்களை அரசாங்கம் முறையாக...

2025-12-09 20:25:42
news-image

200 வருடங்களாக மலையக மக்கள் வாழ...

2025-12-09 20:27:39
news-image

தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு...

2025-12-09 22:18:49
news-image

முள்ளியவளை – நெடுங்கேணி வீதியால்  பயணிக்கும்...

2025-12-09 22:17:16
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Anunine...

2025-12-09 22:07:52