சிங்கப்பூரில் இயங்கும் 'கலாமஞ்சரி' அமைப்பின் நிறுவனர் சௌந்தர நாயகி வயிரவனின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு சிங்கப்பூர் விக்டோரியா ஸ்டேட்டிலுள்ள தேசிய நூலக வாரியத்தில் கடந்த 2ஆம் திகதி வெளியிடப்பட்டது.
பாரதிதாசனின் சில பாடல்களை உள்ளடக்கிய ‘அமுதே தமிழே’ எனும் இசை மற்றும் ஒளிவட்டினை சிங்கப்பூர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வ சதாசிவன் வெளியிட்டார்.
இந்த இசை மற்றும் ஒளிவட்டுக்கு முனைவர் கே. சிவராஜ் இசை வடிவம் கொடுத்திருக்கிறார். இதிலுள்ள ஆறு பாடல்களுக்கு தமிழ் விளக்கங்களை முனைவர் மு. இளங்கோவன் வழங்கினார். இதனை ஆங்கிலத்தில் ஐ.ஏ.எஸ். இதுகீரி எம். ராஜாராம் மொழிபெயர்த்திருக்கிறார்.
இந்த ஆறு பாடல்களையும் நட்சத்திரம் பிரேம் குமார் வீடியோ (ஒளி) அமைப்பு செய்துள்ளார்.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன், தமிழ்ச் சான்றோர் முனைவர் சுப திண்ணப்பன், முன்னாள் சிங்கப்பூர் தூதர் கேசவபானி மற்றும் பல சமூக அமைப்புகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பாரதிதாசனை மையப்படுத்தி 'அமுதே தமிழே' இசைவட்டு தொடர்பான பேச்சு, கட்டுரை மற்றும் பாட்டுப் போட்டிகள் கலா மஞ்சரியால் நடத்தப்பட்டது. இதில் 120 பேர் பங்குபற்றினர்.
தமிழ்மொழி வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் நடைபெற்ற இந்த போட்டியில் போட்டியாளர் ஒருவருக்கு 10 வெள்ளி என்று நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் கிடைக்கப்பெற்ற 1200 வெள்ளி மற்றும் ஒளிவட்டின் மூலம் திரட்டப்பட்ட 600 வெள்ளி என 7000 வெள்ளியை சிண்டாவுக்கு நன்கொடையாக கலா மஞ்சரி வழங்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM