(துரைநாயகம் சஞ்சீவன்)
நீதிமன்ற வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனம் செய்த நபர் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோணேஸ்வரம் ஆலய நிர்வாக சபை வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனம் செய்தவருக்கு எதிரான வழக்கு இன்று (06) திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அவ்வேளை, அந்த நபரை ஒரு இலட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு 8ஆம் இலக்க நீதிமன்ற நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின் கீழ் சுந்தரலிங்கம் சிவசங்கரன் என்பவருக்கு எதிராக 22.05.2024 அன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் சமர்ப்பணம் செய்திருந்தார். சிரேஷ்ட சட்டத்தரணியுடன் கனிஷ்ட சட்டத்தரணி சி.சண்முகியும் மனுதாரர் சார்பாக இவ்வழக்கில் ஆஜராகியிருந்தார்.
கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த வழக்கை தாக்கல் செய்தவர்களையும், வழக்கில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகளையும் எதிராளி விமர்சித்திருக்கின்றார் எனவும் இது 2024ஆம் ஆண்டு 8ஆம் இலக்க நீதிமன்ற நியாய சபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின் கீழ் குற்றச் செயலாகும். எனவே எதிராளிக்கு நீதிமன்றானது அழைப்பாணையை அனுப்புவதற்கான கட்டளையை ஆக்கும்படியாகவும் வழக்காளி சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளால் மன்றில் கோரப்பட்டிருந்தது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிராளிக்கு இன்று (06) அழைப்பாணை விடுத்திருந்தது. அந்த அழைப்பாணையை ஏற்று நீதிமன்றில் முன்னிலையானபோதே அந்த நபருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கானது ஜூலை 09ஆம் திகதி விசாரணைக்காக மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM