உலக சுற்றாடல் தினத்தை அடையாளப்படுத்தும் முகமாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கணித விஞ்ஞான மன்றம் ஏற்பாடு செய்த விஞ்ஞான கணித உபகரண கண்காட்சி மற்றும் மரம் நடுகை நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (05) காலை 8.30 மணிக்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றன.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக்கொடி, கலாசாலைக்கொடி, சுற்றாடல் கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டன. அதை தொடர்ந்து தேசிய கீதம், சுற்றாடல் கீதம் என்பனவும் இசைக்கப்பட்டன.
அதையடுத்து, ஆசிரிய மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலாசாலை சுற்றாடலை தூய்மையாக பேணுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை முழுநிலை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜாவும் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் க. சுபோகரனும் கலந்துகொண்டனர்.
விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவன் இ. செந்தூர்ச்செல்வனின் நெறிப்படுத்தலிலான இந்நிகழ்வில் சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய ஆசிரிய மாணவர் உரையினை கணித நெறி ஆசிரிய மாணவன் ச. சந்திரகுமார் ஆற்றினார்.
வரவேற்புரையினை ஆசிரிய மாணவி த. கீற்றாவும், விருந்தினர்கள் தொடர்பான அறிமுக உரையை கல்வி அபிவிருத்திக்கான பிரதி அதிபர் த. கோபால கிருஷ்ணனும் ஆற்றினர்.
அதிதிகளின் உரையைத் தொடர்ந்து விஞ்ஞான கணித ஆசிரிய மாணவர்களிடையே நடத்தப்பட்ட விஞ்ஞான வினாடி வினா போட்டிக்கான பரிசளிப்பு நடைபெற்றது.
தொடர்ந்து, சூழலை நேசிக்கும் உணர்வுடன் மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்களை பிரதம விருந்தினர் கலாநிதி த. பிரதீபராஜா, கலாசாலை அதிபர் ச. லலீசன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்களான த. அம்பிகைபாகன் மற்றும் இ. சயந்தன் ஆகியோர் நட்டுவைத்தனர்.
நிகழ்வின் நிறைவாக, கணித விஞ்ஞான உபகரண கண்காட்சிக் கூடத்தை பிரதம விருந்தினர் திறந்துவைத்தார்.
ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலை கல்வியில் உள்ள விஞ்ஞான கணித உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அருகிலுள்ள பாடசாலை மாணவர்களுடன் கலாசாலை மாணவர்களும் இக்கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM