(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் பார்படோஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் பி குழு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2008இல் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் மழையால் கைவிடப்பட்டிருந்தது.
மழையினால் தாமதித்து ஆரம்பமானதும் இடையில் தடைப்பட்டு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுமான போட்டியில் ஸ்கொட்லாந்து விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்களைக் குவித்தது.
மழை காரணமாக 52 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸ்கொட்லாந்து 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
ஆட்டம் இடைநிறுத்தப்பட்டபோது மைக்கல் ஜோன்ஸ் 30 ஓட்டங்களுடனும் ஜோர்ஜ் மன்சே 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 10 ஓவர்கள் என மத்தியஸ்தர்களால் அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் எஞ்சிய 3.4 ஓவர்களில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து மேலும் 39 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 90 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது.
மைக்கல் ஜோன்ஸ் 30 பந்துகளில் 45 ஓட்டங்களுடனும் ஜோர்ஜ் மன்சே 31 பந்துகளில் 41 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இதனை அடுத்து டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 109 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடரப்படாமால் கைவிடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM