அனர்த்த நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கோரிக்கை !

04 Jun, 2024 | 05:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை  அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் நிவாரண நிதி எந்தவகையிலும் போதுமானதாக இல்லை. அதனால் நிவாரண நிதியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் குறுகிய காலத்துக்குள் இந்த நிவாரண நடவடிக்கைகளை வழங்க எடுத்துவரும் முயற்சிக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அனர்த்தம் காரணமாக அதிகமானவர்களுக்கு உணவு, உடை  என அனைத்தும் இல்லாமல் போயிருக்கிறது. அதனால் இவர்களுக்காக முறையான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த வேண்டும். மாவட்ட செயலகங்களுக்கு மேலதிகமாக 10இலட்சம் ரூபா அனுப்பி இருக்கிறது. ஆனால் அந்த எந்தவகையிலும் போதுமானதாக இல்லை. 

சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மூலம்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆகாரம் வழங்க முடியாது. ஒரு நேர சாப்பாடு கூட வழங்க முடியாது.அதனால் குறித்த சுற்று நிருபத்தை உடனடியாக மாற்றயமைக்க வேண்டும். நிவாரணம் வழங்கும் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு 400 ரூபா என்ற தொகை எந்தவகையிலும் போதாது.

அத்துடன் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் முற்றாக மாற்றப்பட வேண்டும். முறையான அனர்த்த முகாமைத்துவ நிவாரண வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00