தேர்தலை நடத்தாமலிருப்பதற்காக வேட்புமனுவை இரத்து செய்வது குறித்து அவதானம் செலுத்தவில்லை - உள்ளுராட்சி, மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் !

03 Jun, 2024 | 07:13 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வது குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள ஆலோசனை தேர்தலை நடத்தாமலிருப்பதற்காக அல்ல. மாறாக வேட்புமனு தாக்கலால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தவிர்த்துக் கொள்ளவதற்காகவே இவ்வாறான ஆலோசனை வழங்கப்பட்டது என உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தாமலிருப்பதற்காக ஜனாதிபதியால் இந்த ஆலோசனை வழங்கப்படவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படாமலிருப்பதால் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பல தரப்பினரும் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டே அதனை இரத்து செய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்கள் தற்காலிக இடமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் கட்சி மாறியுள்ளனர். சிலர் அரசியலிலிருந்தே விலகியுள்ளனர். அது மாத்திரமின்றி ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. இதற்கு சிறந்த உதாரணம். 

அவர் கொழும்பு மாநாகரசபையின் மேயர் வேட்பாளராக வேட்புமனு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தார். தற்போது மீண்டும் பதவியேற்றுள்ளார். ஆனால் அவரது வேட்புமனு அவ்வாறே உள்ளது. அதாவது அவர் வேட்பாராளராகவும் உள்ளார். பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.  

அவ்வாறு இருப்பதற்கு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை. ஆனால் அது சம்பிரதாயபூர்வமானதல்ல. இவ்வாறான சிக்கல்களை கருத்திற் கொண்டே வேட்புமனுவை இரத்து செய்யுமாறு பல தரப்பினரிடமிருந்தும் எமக்கு கோரிக்கைகள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் தற்போது நீதிமன்றத்தில் 4 வழக்குகள் விசாரணையில் இருப்பதால் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை எம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:23:35
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19