''இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி'' என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னணி தலைவருமான ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக புது தில்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா, திமுக கட்சியின் முன்னணி மற்றும் மூத்த நிர்வாகிகளான திருச்சி சிவா, டி. ஆர். பாலு உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.
கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருக்கிறார். அதனுடன்
'' தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் பிறந்த நாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர். சமூக நீதியை மேம்படுத்துவதிலும், பொருளாதார சமத்துவத்தை முன்னேற்றுவதிலும், தமிழக மற்றும் தமிழ் மக்களின் மொழி கலாச்சாரத்தை பாதுகாக்கவும் பாடுபட்டவர்.
அவரது வாழ்க்கை நாடு முழுவதும் எண்ணற்ற மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது'' என பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதனிடையே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின், அவருடைய கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் வருகை தந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM