மக்கள் ஆணை பெற்ற ஜனநாயக ஆட்சி நாட்டில் நடைபெற வேண்டுமாக இருந்தால் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் - விசுவமடு பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு கடிதங்களை பொது அமைப்புக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், சந்திப்பும் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்பு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தைத் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், 2019ம் ஆண்டு நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி ஒருவர் பதவியேற்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலும் நடாத்தப்பட வேண்டும். காரணம் நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
தற்போது மக்களிடம் ஆணையைப் பெற்று நாட்டை வழிநடாத்த வேண்டும். அதனை மக்கள் ஆணை மூலம் கொண்டு செல்வதுதான் ஜனநாயகம் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM