(நெவில் அன்தனி)
தாய்வானில் நடைபெற்றுவரும் சைனீஸ் தாய்ப்பே பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் தருஷி கருணாரட்ன சனிக்கிழமை (01) இரட்டை வெற்றியைப் பூர்த்தி செய்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 52.48 செக்கன்களில் நிறைவு செய்து வெற்றி பெற்ற தருஷி கருணாரட்ன, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தினார்.
800 மீற்றர் ஓட்டப் போட்டியை அவர் 2 நிமிடங்கள் 05.74 செக்கன்களில் நிறைவு செய்து வெற்றி பெற்றார்.
எனினும் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டுவதற்கு 0.04 செக்கன்களால் அவர் தவறினார்.
அடுத்து நடைபெறவுள்ள போட்டியில் 800 மீற்றரை 2 நிமிடங்கள் 01.00 செக்கன்களில் தருஷி ஓடி முடித்தால் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்ற தகுதிபெறுவார்.
இதேவேளை, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேக்கம்கே இரண்டாம் இடத்தைப் பெற்றார். அவர் ஈட்டியை 52.79 மீற்றர் தூரத்திற்கு எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய அருண தர்ஷன 5ஆம் இடத்தைப் பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM