யாழ்ப்பாணத்தில் நிறப்பூச்சுகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர், காசோலையை கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த இருவரே நிறுவனத்திடம் 11 இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பின்னர், காசோலையை வழங்கியுள்ளனர்.
இந்த காசோலையைக் கொண்டு வங்கியில் வைப்பு செய்ய முற்பட்டபோதே அந்த வங்கிக்கணக்கில் பணம் இல்லை என தெரியவந்துள்ளது.
பின்னர், நிறப்பூச்சு நிறுவனத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM