(நா.தனுஜா)
அண்மைய சில வருடங்களாக கனேடிய அரசியல் பிரதிநிதிகளால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுவரும் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டு தொடர்பில் கனடாவிடம் இலங்கை அதன் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்த கனடாவின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான பிரதி அமைச்சர் கிறிஸ்டோபர் மக்லெனன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த வாரம் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்வதில் இலங்கையினால் அடையப்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்தும், வருமானத்தையும், வளர்ச்சியையும் ஈட்டிக்கொள்ளக்கூடியவகையில் பொருளாதார இராஜதந்திர நடைமுறைக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் குறித்தும் வெளிவிவகார செயலாளர் கனேடிய பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
அதுமாத்திரமன்றி இம்முயற்சிகள் அனைத்தும் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை அண்மைய சில வருடங்களாக கனடாவின் அரசியல் சார்ந்த உயர்மட்டத்தரப்பினரால் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுவரும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் வெகுவாக அதிருப்தியடைவதாகவும் அருணி விஜேவர்தன கிறிஸ்டோபர் மக்லெனனிடம் தெரிவித்தார். அத்தோடு கனடா இலங்கையுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவேண்டும் எனவும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச்செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM