சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 10 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, பிலிமத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 22 ஆம் திகதி துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
இதன்போது, இவர் கொண்டுவந்த பயணப் பொதியொன்றை விமான நிலையத்தில் தவறி விட்டுச் சென்றுள்ள நிலையில் தனது பயணப் பொதியை எடுத்துச் செல்வதற்காக நேற்று (30) விமான நிலையத்திற்கு மீண்டும் சென்றுள்ளார்.
இதன்போது, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தப் பயணப் பொதியிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான 6 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM