பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான வாஸ் ரங்க நாலக்க பீரிஸின் சகோதரர் காரில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜா - எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து, 12,400 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 3 வங்கி அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ஜா - எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாஸ் ரங்க நாலக பீரிஸின் சகோதரர் என்பதும், அவரது போதைப்பொருள் வலையமைப்பை இவரே நடத்தி வருகிறார் என்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM