தென் கொரியாவுக்கு பலூன்களில் குப்பைகளை வட கொரியா அனுப்பியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் செவ்வாய்க்கிழமை (28) இரவு முதல் புதன்கிழமை (29) காலை வரை 150 க்கும் அதிகமான பலூன்கள் குப்பைகளை சுமந்தவாறு வட கொரியாவில் இருந்து வருந்ததை அவதானித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த செயல் வட கொரியா அதன் தெற்கு அயல் நாடுகளுடன் மோதுவதற்கு ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு இராட்சத பலூன்கள் மற்றும் சிறிய பலூன்கள் சுமந்து வந்த பொதியில் இருந்த பிளாஸ்டிக் துண்டுகள், காகிதத் தாள்கள் அடங்கி குப்பை வீதியில் நடைபாதையில் கிடக்கும் புகைப்படங்களை தென் கொரிய இராணுவம் வெளியிட்டுள்ளது.
தென்கொரியாவிற்குள் இதுவரை பலூன்கள் குப்பைகளை சுமந்து வந்த நிலையில் அரசாங்க நிறுவனங்களால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளைக்கு இராணுவம் ஒத்துழைத்தது.
"வட கொரியாவின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறுவதாகவும், நமது குடிமக்களின் பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்துவதாகவும் உள்ளது". "வட கொரிய பலூன்களால் எழும் அனைத்துப் பொறுப்பும் முழுவதுமாக வட கொரியாவைச் சார்ந்தது, மேலும் வட கொரியாவின் மனிதாபிமானமற்ற மற்றும் கீழ்நிலை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம்." தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியா அரசாங்கம் வடக்கு ஜியோங்கி மற்றும் கேங்வோன் மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு "அடையாளம் தெரியாத பொருட்கள்" குறித்த வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பலூன்கள் விமான நிலையங்கள் மற்றும் அதிவேக வீதிகளை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது என இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாட்டை "கருத்து சுதந்திரம்" என வடகொரியாவின் ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரிய எல்லை மற்றும் மத்திய பகுதிகளில் மலசல கூட நோக்கங்களுக்காக. பாவிக்கப்படும் கடதாசி மற்றும் பிற பிற கழிவுப் பொருட்கள் கொண்ட பொதியை சுமந்து வந்த பலூன்களை சிதறடித்ததாக கிம் ஜாங் உன் அரசு நடத்தும் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், நடவடிக்கைகளை பல வருடங்களாக தனது நாட்டிற்கு வட கொரியாவிற்கு எதிரான துண்டு பிரசுரங்களுடன் பலூன்களை அனுப்பும் தென் கொரியாவின் பல வருட நடைமுறையுடன் ஒப்பிட்டுள்ளார்.
"அவர்கள் எப்போதும் செய்யும் சில விஷயங்களை நாங்கள் செய்துள்ளோம், ஆனால் அவர்கள் ஏன் நெருப்பு மழையால் தாக்கப்பட்டதைப் போல பெரிய விடயமாக கருதுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரிய செயற்பாட்டாளர்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், உணவு, மருந்து, ரேடியோக்கள் மற்றும் தென் கொரிய செய்திகள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் அடங்கிய USB ஸ்டிக்குகள் உட்பட அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட சர்வாதிகார சர்வாதிகாரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.
தென் கொரியாவின் பாராளுமன்றம் 2020 இல் இத்தகைய நடவடிக்கைகளை தடை செய்த பின்னரும் கூட, வட கொரியாவில் இருந்து விலகியவர்கள் உட்பட தெற்கில் பிரச்சாரம் செய்பவர்கள் இந்த பொருட்களை பலூன்கள், ட்ரோன்கள் மற்றும் எல்லை தாண்டிய ஆற்றில் மிதக்கும் போத்தல்கள் மூலம் நீண்ட காலமாக அனுப்பியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM