காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி சேர்.ராசீக் பரீட் மாவத்தையிலுள்ள கடை ஒன்றிலிருந்து 70 மதன லேகியம் பக்கற்றுகள் இன்று புதன்கிழமை (29) காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தற்போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கென தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
குறித்த நபரிடமிருந்து வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 70 பக்கற்றுக்கள் மதன லேகியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கிருந்த மோட்டார் சைக்கிளும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்டகுற்ற விசாரணை பிரிவினர் சந்தேக நபரையும் லேகிய பக்கட்டுகளையும் ஒப்படைத்துள்ளனர் .
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த நபரை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்கா தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM