காசாவின் ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் கூடாரங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் அமெரிக்காவின் வெடிமருந்துகளை பயன்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதிவான வீடியோவை சிஎன்என் ஆய்வு செய்த வேளை இது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சிஎன்என் வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்வின் மூலமும் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
காசாவின் தென்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பெரும் தீ மூண்டமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக 45க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரபாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு வட்டாரங்களும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
சிஎன்என் தன்னிடம் உள்ள வீடியோ காட்சிகள் ரபா முகாம் தீப்பிடித்து எரிவதை காண்பிக்கின்றது என குறிப்பிட்டுள்ளதுடன் , இரவு நேரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இருந்து தப்புவதற்கு பலர் முயல்வதையும் காணமுடிவதாக தெரிவித்துள்ளது.
சிறுவர்களின் உடல்கள் உட்பட எரிந்த உடல்களை இடிபாடுகளிற்குள் இருந்து மீட்பு பணியாளர்கள் வெளியில் எடுப்பதை அவதானிக்க முடிவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
குவைத் அகதி முகாம் 1 என அழைக்கப்படும் இந்த முகாமின் மீது இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சிஎன்என் தெரிவித்துள்ளது.
சிஎன்என்னின் வீடியோவை ஆராய்ந்த வெடிகுண்டுகள் ஆயுத நிபுணர்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜிபியு 39 குண்டின் ஒரு பகுதியை காணமுடிவதாக தெரிவித்துள்ளனர்.
பொயிங் நிறுவனம் ஜிபியு39 குண்டுகளை தயாரிக்கின்றது.
மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு இந்த குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என வெடிபொருள் ஆயுத நிபுணர் கிறிஸ்கொப் ஸ்மித் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவின் முன்னாள் உறுப்பினரான டிரெவெர் போல் குண்டு சிதறல்களை அடிப்படையாக வைத்து ஜிபியு39 குண்டே பயன்படுத்தப்பட்டுள்ளது என உறுதி செய்துள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM