ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் கூறி 140 பேரை ஏமாற்றி பணம் பெற்ற மூவர் மொரட்டுவை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாரதி பயிற்சி நிலையத்தை நடத்துவர் என பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த நிலையத்தை பொலிஸார் சோதனையிட்ட போது வெவ்வேறு நபர்களின் 39 கடவுச்சீட்டுகள் மற்றும் போலி ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சாரதி பயிற்சி நிலையத்தை நடத்தும் பிரதான சந்தேகநபர் மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் ஒருவரிடமிருந்து 06 இலட்சம் முதல் 14 இலட்சம் வரை பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளவர்கள் இந்த மோசடியில் சிக்கியுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகளையும் வழங்கியுள்ளனர் .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கட்டுபெத்த மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM