தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது - நாமல் ராஜபக்ஷ

Published By: Vishnu

29 May, 2024 | 01:14 AM
image

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மக்களின் விருப்பத்துக்கு அமைய நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தேர்தல்களை நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்தாது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலும் இரண்டாண்டு காலம் பதவி நீடிப்பு வழங்க வேண்டும்.அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் செலவுகளும்,சுற்றாடல் மாசடைவும் மாத்திரம் மிகுதியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரது இந்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு பதிவேற்றம் செய்துள்ளார்.

தேர்தலை நடத்தாது ஜனாதிபதியினதும்,பாராளுமன்றத்தினதும் பதவி காலத்தை நீட்டிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளை பாதிக்கும். தற்போதைய நிலையில் மக்களின் விருப்பத்துக்கு அமைய நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, மக்களின் குரல்களை தாமதப்படுத்த கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தில் சிறுவன் நீரில்...

2025-04-25 01:52:13
news-image

ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் தொடர்பில்...

2025-04-24 21:56:07
news-image

தேசபந்துவை பதவி நீக்கும் மூவரடங்கிய விசாரணைக்...

2025-04-24 21:55:36
news-image

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக "கிளீன்...

2025-04-24 21:25:17
news-image

பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பது எமது நாட்டில்...

2025-04-24 17:04:13
news-image

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின்...

2025-04-24 17:52:31
news-image

வொஷிங்டனில் உயர்மட்ட அதிகாரிகள் எவரையும் இலங்கை...

2025-04-24 15:49:58
news-image

அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை...

2025-04-24 20:29:37
news-image

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்...

2025-04-24 14:54:42
news-image

இப்ராஹிமின் சொத்துக்களை அரசுடமையாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு...

2025-04-24 19:03:22
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர்...

2025-04-24 17:59:48
news-image

ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்துக்கு வருகை -...

2025-04-24 18:34:51