கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு உலகின் துணிச்சலான பெண் என்ற சர்வதேச விருதை அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் வழங்கி கௌரவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
சந்தியா எக்னெலிகொடவைப் போன்று உலக அளவில் மேலும் 13 பெண்களுக்கு இவ்வாறு விருது வழங்கி கௌவிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.
தனது கணவனுக்காக மட்டுமன்றி காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாகவும் போராடியவர் என்பதற்காக இவர் இந்த விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட நிலையிலேயே இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுரகம் மேலும் தெரிவித்துள்ளதுடன் நீதி, நல்லிணக்கத்திற்கான ஒரு ஆழமான சின்னமாக விளங்குவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM