ரெமல் புயல் ; பங்களாதேஷ், இந்தியாவில் பலத்த மழையினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு

Published By: Digital Desk 3

27 May, 2024 | 04:27 PM
image

ரெமல் புயல் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கரையைக் கடந்ததை அடுத்து, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது.

இதன் காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்பட்டுள்ளது.

புயல் தாக்கத்திற்கு முன் ஆயத்தமாக பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் 10 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

ரெமல் புயல் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் புயல் சீறியதாக இந்தியாவின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோல்கத்தா நகரில் புயலின் வேகம் உச்சத்தில் இருந்தபோது பெரிய கொங்கிரிட் துண்டுகள் விழுந்ததில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

ரெமல் புயல் 89 மில்லி மீற்றர் (3.5 அங்குலம்) மழையை பொழியும் மற்றும் வங்காள விரிகுடாவின் கடல் அலையானது 2.5 முதல் 3.7 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷில் புயல் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மணிக்கு 120 கிலோ மீட்டர்வேகத்தில் காற்று வீசியதால், மரங்களும் மின் கம்பங்களும் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பங்களாதேஷில் உள்ள மோங்லா மற்றும் பேரா கடல்சார் துறைமுகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

இவர்களில் குறைந்தது அரை இலட்சம் மக்கள் "களிமண், மரம், பிளாஸ்டிக், வைக்கோல் அல்லது தகரம் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட வீடுகளில் வாழ்கின்றனர் என  இலாப நோக்கற்ற BRAC அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் பருவழைக் காலத்தில் உருவான முதல் புயலாக ரமெல் உள்ளது. புயலுக்கு ஓமன் நாடு 'ரமெல்' என பெயரிட்டுள்ளது. இதற்கு அராபிய மொழியில் மண் என்று அர்த்தமாகும். ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை செப்டம்பர் வரை நீடிப்பது வழக்கம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய...

2025-05-16 15:44:39
news-image

பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை:இந்திய...

2025-05-16 11:50:05
news-image

துருக்கியில் நடக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில்...

2025-05-15 16:52:20
news-image

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி...

2025-05-15 16:08:47
news-image

'உங்களால் உதவமுடியுமா? நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம்"...

2025-05-15 13:43:54
news-image

மெக்சிகோவில் விபத்து ; 21 பேர்...

2025-05-15 10:57:56
news-image

மெக்சிக்கோவில் பிரபல அழகி சுட்டுக்கொலை ;...

2025-05-15 10:40:05
news-image

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப்...

2025-05-14 16:26:48
news-image

இஸ்ரேலுடன் சிரியா சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும்...

2025-05-14 16:22:25
news-image

சீனாவின் க்ளோபல் டைம்ஸ் துருக்கியின் டிஆர்டி...

2025-05-14 15:24:16
news-image

கனடா வெளியுறவு அமைச்சரான தமிழக பெண்...

2025-05-14 12:43:04
news-image

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9...

2025-05-14 11:39:30