ரெமல் புயல் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கரையைக் கடந்ததை அடுத்து, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்பட்டுள்ளது.
புயல் தாக்கத்திற்கு முன் ஆயத்தமாக பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் 10 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
ரெமல் புயல் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் புயல் சீறியதாக இந்தியாவின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோல்கத்தா நகரில் புயலின் வேகம் உச்சத்தில் இருந்தபோது பெரிய கொங்கிரிட் துண்டுகள் விழுந்ததில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
ரெமல் புயல் 89 மில்லி மீற்றர் (3.5 அங்குலம்) மழையை பொழியும் மற்றும் வங்காள விரிகுடாவின் கடல் அலையானது 2.5 முதல் 3.7 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷில் புயல் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிக்கு 120 கிலோ மீட்டர்வேகத்தில் காற்று வீசியதால், மரங்களும் மின் கம்பங்களும் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பங்களாதேஷில் உள்ள மோங்லா மற்றும் பேரா கடல்சார் துறைமுகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களில் குறைந்தது அரை இலட்சம் மக்கள் "களிமண், மரம், பிளாஸ்டிக், வைக்கோல் அல்லது தகரம் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட வீடுகளில் வாழ்கின்றனர் என இலாப நோக்கற்ற BRAC அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் பருவழைக் காலத்தில் உருவான முதல் புயலாக ரமெல் உள்ளது. புயலுக்கு ஓமன் நாடு 'ரமெல்' என பெயரிட்டுள்ளது. இதற்கு அராபிய மொழியில் மண் என்று அர்த்தமாகும். ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை செப்டம்பர் வரை நீடிப்பது வழக்கம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM