ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பாரிய கூட்டணி - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

Published By: Digital Desk 7

28 May, 2024 | 06:10 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் இடம்பெறக்கூடிய எதிர்வரும் தேர்தலை இலக்காகக்கொண்டு இலங்கையில் மிகவும் விசாலமான கூட்டணியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அமைக்க இருக்கிறோம்.  அதன் அங்குரார்பண நிகழ்வு அடுத்த மாதம் அம்பாந்தோட்டையில் இடம்பெறும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாட்டில் அடுத்து இடம்பெறும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்க இருக்கும் நிலைப்பாடு தொடர்பாக குறிப்பிடுகையிலலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் இடம்பெறக்கூடிய எதிர்வரும் தேர்தலை இலக்காகக்கொண்டு இலங்கையில் மிகவும் விசாலமான மற்றும் பலம்மிக்க கூட்டணியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அமைக்க இருக்கிறோம். அதன் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற இருக்கிறது. அன்றைய தினம் பாரிய மக்கள் கூட்டத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியின் கன்னி பேரணி இடம்பெற இருக்கிறது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துப்படுத்தாத கட்சிகள் என பல கட்சிகள். எமது  பாரிய கூட்டணிக்கு  தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றன. அதேநேரம் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த பேரணியில் கலந்துகொள்வதாக தற்போதே எமக்கு அறிவித்திருக்கிறார்கள்.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி கட்சியை இல்லாமலாக்க சிலர் செயற்படுகின்றனர். அவர்களுக்கு எதிராக  நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரம் தற்போது எமது தரப்பினர் வசமே இருக்கிறது. கட்சியின் தலைமையகம் கட்சி ஆதரவாளர்கள் அனைவருக்கும் திறந்திருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-17 06:11:47
news-image

விவசாயிகளைப் போன்று அரச உத்தியோகத்தர்களும் கைவிடப்படுவார்களா?...

2025-02-16 20:51:57
news-image

79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை...

2025-02-17 04:06:19
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச...

2025-02-17 03:54:13
news-image

யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்த...

2025-02-17 03:47:47
news-image

யாழில் கல்சியத் தண்ணீரை குடித்த முதியவர்...

2025-02-17 03:44:42
news-image

முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள்...

2025-02-17 03:39:47
news-image

மின்சாரம் தாக்கி வேலணை செட்டிபுலம் சிறுவன்...

2025-02-17 03:31:52
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19