ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் மாவீரன்பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறந்துவைப்பு !!!

Published By: Robert

30 Mar, 2017 | 09:01 AM
image

வன்னி பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் திருவருவசிலையானது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் நேற்றையதினம் மாலை 4மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சமாதி அமைந்துள்ள கற்சிலைமடு சிலையடி பகுதியிலே இந்த திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

பண்டாரவன்னியன் திருவுருவ படம் தாங்கிய பாரம்பரிய கலை பண்பாட்டு வீதிப்பேரணி கற்சிலைமடு சந்தியிலிருந்து சிலையடி பிரதேசம் வரை அங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக  வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்  விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராசர் கலந்துகொண்டு திருவுருவச்சிலையை திறந்துவைத்திருந்தார். மேலும் இந்த விழாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.,சிவமோகன் மற்றும் இலங்கை தமிழரசுகட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குலநாயகம் மற்றும் தமிழரசுகட்சியின் மூத்த உறுப்பினர் கனகசபாபதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் மாந்தைகிழக்கு பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தவிழாவில் பண்டாரவன்னியன் காவிய நாடகம் மற்றும் வரலாற்று நூல்களை எழுதிய மறைந்த எழுத்தாளர் கவிஞர் முல்லைமணிக்கு நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் நிதியொதுக்கீட்டில் பண்டாரவன்னியன் அறங்காவற் கழகத்தால் இந்த சிலை அமைக்கக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02