பக்கச்சார்பானது; குறைபாடுடையது - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை குறித்து இலங்கையின் ஜெனீவா பிரதிநிதி சாடல்

Published By: Rajeeban

26 May, 2024 | 10:53 AM
image

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது பக்கச்சார்பானது சுயமாக உருவாக்கியது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக சாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோக்கெர் டேர்க்கிற்கு அறிக்கை குறித்து கடிதமொன்றை எழுதியுள்ள அவர் அந்த கடிதத்தில் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணை எதுவும் இல்லாத நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதை தேவையற்ற ஒரு தலைப்பட்சமான முயற்சி என  இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைப்பாட்டினை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது என தெரிவித்துள்ள இலங்கை தூதுவர் இந்த அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டமைக்கான நோக்கம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் என வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கை தவறானது என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக பக்கச்சார்பின்மை புறநிலை மற்றும் தேர்ந்துஎடுக்காமை ஆகிய கொள்கைகளின் அடிப்படைகளிற்கு இந்த அறிக்கை முரணாணது என் தெரிவித்துள்ளார் என விடயமறிந்த வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கம்நல்லிணக்கத்திற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த அறிக்கை பக்கச்சார்பானது அரசியல் மயப்படுத்தப்பட்டது சுயமாக உருவாக்கப்பட்டது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் சாடியுள்ளார்.

இலங்கையின் ஆயுதமோதல் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகிய தருணத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது எனது தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட...

2026-04-11 13:52:20
news-image

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும்...

2026-04-11 13:55:09
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: நாடளாவிய ரீதியில்...

2026-04-11 13:22:13
news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29