ஹப்புத்தளையில் வீட்டின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண் பலி : இருவர் படுகாயம் !

26 May, 2024 | 07:55 AM
image

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெடிய வைத்தியசாலைக்கு அருகில் நேற்று சனிக்கிழமை இரவு (25) சுமார் 7.30 மணியளவில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் 65 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்தில் 80 வயதுடைய ஆண் ஒருவரும் 73 வயதுடைய பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில் பங்கெடிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்தில் மரணித்த பெண் மரம் முறிந்து விழுந்த வீட்டில் சுமார் 20 வருட காலமாக வீட்டு வேலை பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வீட்டின் மீது மரம் முறிந்து விழுகையில்  குறித்த பெண் வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37