களுத்துறை,கட்டுகுருந்த பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் களுத்துறை தெற்கு பொலிஸாரால் நேற்று (24)கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் பெலபிட்டியாகொட, நுகேகொடை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெபுவன மற்றும் மொரந்துடுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24, 39 மற்றும் 41 வயதுடைய மூன்று நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 56 துப்பாக்கி, 4 தோட்டாக்கள், 1 கிலோ கேரளா கஞ்சா, 340,000 ரூபா பணம் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி அன்று மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை சுட்டுக் கொலை செய்து தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM