தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்கள் 3 பேரை சுகாதார அமைச்சர் ரமெஷ் பத்திரண நியமித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை சட்டத்திற்கமைய சட்டம், கணக்கியல், முகாமைத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இருந்து பணிப்பாளர் சபைக்கு சிறந்த நிபுணர்களை பரிந்துரைக்கவும் நியமிக்கவும் அமைச்சருக்கு அதிகாரம் உண்டு.
அதன்படி, பட்டய கணக்காளர் சுஜீவ முதலிகே, ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1 இன் சிரேஷ்ட அதிகாரி சுசந்த கஹவத்த பாலித குமாரசிங்க ஆகியோர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் நியமிக்கப்பட்ட மூன்று நிர்வாக சபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததைத் அடுத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கணக்கியல் துறையைச் சேர்ந்த சுபுல் விஜேசிங்க, சட்டத் துறையைச் சேர்ந்த சட்டத்தரணி மனோஜ் கமகே மற்றும் நிர்வாகத் துறையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் பிரியந்த சேரசிங்க ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM