விமல் தண்ணீர் அருந்துவது உண்ணாவிரதத்தில் உள்ளடங்குமா? : அசாத் சாலி

Published By: Ponmalar

29 Mar, 2017 | 04:50 PM
image

(ந.ஜெகதீஸ்)

சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருப்பாரானால் ஏன் தண்ணீர் அருந்த வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பினார்.

விமல் வீரவன்சவை போல் சிறையில் உள்ள ஏனைய கைதிகளும் உண்ணாவிரதம் இருந்தால், நீதி வழங்கலில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என நினைப்பது நகைப்புக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

தேசிய ஐக்கிய முன்னனி கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

தற்போது சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருப்பதாக நாட்டுக்கும் மக்களுக்கும் மாயையை ஏற்படுத்திக்கொண்டு சிறைச்சாலைக்குள் தண்ணீர் அருந்துவது உண்ணாவிரதத்தில் உள்ளடங்குமா. 

அத்துடன் உண்ணாவிரதமிருந்து உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு “சேலைன்” வழங்கப்பட்டிருந்தது. அப்போதே அவரது உண்ணாவிரதம் கலைந்த விட்டது.

இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதால் என்ன நன்மை ஏற்படப்போகின்றது. என்பதை அவர் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். 

குறித்த உண்ணாவிரதத்தினூடாக நீதி மன்ற தீர்ப்பை மாற்றி எழுதிவிட முடியுமா?. கடந்த காலத்தை பொருத்தவரையில் நீதித்துறையை கூட கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆட்சியாளர்களிடம் இருந்தது. ஆனால் கடந்த காலத்தை போல் அல்லாது தற்போது நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதை அவதானிக்கமுடிகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19